ஜனாதிபதித் தேர்தலில் மு.கா இனது பேரம் பேசல் எவ்வாறு அமைய வேண்டும்?"கருத்தை வெளிப்படுத்துகிறார் யூ.கே நபீர்

"ஜனாதிபதித் தேர்தலில் மு.கா இனது பேரம் பேசல் எவ்வாறு அமைய வேண்டும்?"தனது கருத்தை வெளிப்படுத்துகிறார் பொறியியலாளரும்,பிரபல சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் 

இன்னும் ஓரிரு மாதங்களில் இலங்கை மக்கள் ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள உள்ளார்கள்.இத் தேர்தலில் முன்பு போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிக்கனியை ருசிக்க வெற்றிக்கனி அவ்வளவு இலகுவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இனது கையில் கிடைக்காது என்பதை ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு ஒரு செய்தியை தெளிவாக விடுத்துள்ளன.

இது யாருக்கு?எப்படியோ?மு.கா இற்கு மிகப் பெரிய ஜக்போட் அடித்துள்ளது.மு.கா எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரிய பேரம் பேசல் சக்தியைப் பெறப் போகிறது.முஸ்லிம் காங்கிரசிற்கு கிடைக்கப் போகும் பேரம் பேசல் சக்தி கொண்டு முன்பு இலங்கை முஸ்லிம்களிற்கு விடிவைக் தேடிக்கொடுக்கும் பேரம் பேசல்களில் மு.கா முனைப்புக் காட்ட வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை அரசுடன் மு.கா இணைய வேண்டுமாக இருந்தால் கிழக்கு மாகாண சபை ஆட்சியமைத்தலின் போது மு.கா அரசுடன் செய்து கொண்ட கரையோர மாவாட்டக் கோரிக்கையை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே தற்போது கிடைக்கப் போகும் பேரம் பேசல் சக்தியினது வலிமை கொண்டு அழுத்தி அடைந்து கொள்ள மு.கா முயற்சிக்க வேண்டும்.அல்லது,ஜனாதிபதி பகிரங்கமாய் இது பற்றிய வாக்குறுதிகளை முஸ்லிம்களிடம் வழங்க மு.கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மு.கா அடையப் போகும் பேரம் பேசல் சக்தி கொண்டு கட்சியினை புனர் நிர்மாணம் செய்ய அல்லது பாதுகாக்க வேண்டி வெறுமனே பட்டம்,பதவிகளுக்கு சோரம் போய் விட வேண்டாம் என்பதனை இவ் இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.இன்று இலங்கை பூராகவும் உள்ள முஸ்லிம்கற்கு எத்தனையோ தேவைகள் உள்ளன.காற்றுள்ள போது தான் தூற்றிக் கொள்ள வேண்டும்.இப்போது எம் பக்கம் காற்று ஜோராய் வீசிகிறது.இச் சந்தர்ப்பத்தை முஸ்லிம்கள் நழுவா விடுவார்களாக இருந்தால் மீண்டும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் உருவாக பல வருடங்கள் செல்ல வேண்டும்.ஏன்?சில வேலை கிடைக்காதே போகலாம்.

இன்று முஸ்லிம்களின் இருப்புக்கள் கேள்விக் குறியாகி உள்ளன,கானிப் பிரட்சனைகள் பல தீர்வுகானாது தடுக்கப் பட்டுள்ளன,பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது,முஸ்லிம்களின் உரிமைகளை வென்று எடுக்கும் கரையோர மாவாட்டக் கோரிக்கைளை எது வித சலுகைக்களுமின்றி விடாப் பிடியாய் இருந்து மு.கா அடைந்து கொள்ள வேண்டும்.

இவற்றிற்கு எக் கட்சி உடன்படுகிறதோ அக் கட்சியுடன் மாத்திரமே எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மு.கா உறவைப் பேன வேண்டும்.இவ்வாறான கோரிக்கைகளை எக் கட்சி ஏற்கிறதோ அக் கட்சிக்கு எமது ஆதரவை வழங்கி அக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வண்ணம் நேரடிக் களமிறங்கலுக்கு நான் தயாராக உள்ளேன் என்பதை எனது இக் கருத்தினூடாக மக்களுக்கு கூறிக் கொள்ளகிறேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :