எம்.வை.அமீர்-
செப்டம்பர் 6ம்தேதி ஆசிரியர்கள்தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று, ஆசிரியர்கள்மற்றும்ஆசிரியைகளைச்சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள்ஆசிரியர்கள்என்றால்அது மிகையாகாது.
மாதா, பிதா,குரு, தெய்வம்என்றார்கள், வேறு எந்த பணிக்கும்கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.
அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும்முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்மாதம் 5 ஆம்திகதி சர்வதேச ஆசிரியர்தினம்அனுஷ்டிக்கப்படுகிறது.
வெறும்மாணவர்களாக பாடசாலைக்கு வரும்சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக்கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும்நாள் இன்னாள். எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு' என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால்என்ன? இதில்மாணவ, மாணவி சமூகத்தின்பங்கு எப்படி இருக்க வேண்டும்என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள்தான்கற்றுக்கொடுக்கின்றனர்.
குறிக்கோள்இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச்சமம். இது போல் தான்மாணவ சமூகமும்குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால்எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன்மூலம்கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின்
முகத்தில்ஓர் மகிழ்ச்சி தோன்றும்.
இதனை சொல்வதை விட உணர்வுப்பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும்மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும்பொறுப்பும்ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல்ஆசிரியர்கள் என்பவர்கள்மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள்அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின்பண்புகள், குணங்களை பார்க்கும்மாணவ, மாணவிகளின் மனதில்அப்படியே பதியும். அதனால்ஆசிரியர்கள்தங்களை மாணவர்களின்காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில்தான்பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம்கடினமாக உழைத்து வாழ்வில்ஒளிரும்மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
சிறு குழந்தைகளுக்குச்பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக்கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான்அவர்களது முழுக்கவனமும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம்சொல்லிக்கொடுக்கும்பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச்சரிப்பையும்காணும்பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில்ஏற்படும்.
அதே போல்கிராமத்தில் இருக்கும் பாடசாலைகளில் பணியாற்றுவதில் கிடைக்கும்மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப்கல்வி படிக்கும் மாணவன்பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பாடசாலையையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.
ஆசிரியர்பணியில்சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள்முடித்துச் செல்லும்பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும்ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள்என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில்பார்க்க நினைத்தால் பாடசாலைகளுக்குச்செல்லலாம்.
பாடசாலையில்இருக்கும்ஆசிரியர்மாணவியை பலாத்காரம்செய்ய முயற்சி என்று வருகின்ற செய்திகளால்ஒட்டுமொத்த ஆசிரியர்கள்சமூகத்திற்கே தலை குனிவானது. அதே போல்முன்பு போல்ஆசிரியர்கள்பணியாற்றுவதில்லை. பாடசாலையின் வகுப்பறைகளில்சரியாக சொல்லிக்கொடுக்காமல்தன்னிடம்டியூஷன்வந்து
படிக்கும்மாணவர்களுக்கு மட்டும்சிறப்பாக சொல்லிக்கொடுக்கும்போக்கு தற்பொழுது ஆசிரியர்களிடம்காணப்படுகிறது. ஒரு வழக்கறிஞர்தவறு செய்தால் அவரை பூமியில்இருந்து ஆறடி உயரத்தில்தொங்க விட்டு விடலாம். அதே போல் ஒரு டாக்டர்தவறு செய்கிறார்என்றால்அவரை பூமியில்இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால்ஒரு ஆசிரியர்தவறு செய்தால்எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள்பாதிக்கப்படுவர்என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து
செயல்பட்டால்ஆசிரியர்பணி சிறக்கும்இ அதனால்நாடுஇ சிறக்கும்.
ஒரு தேசத்தின்வளமான எதிர்காலத்தைத்தாங்கவிருக்கும்தூண்களுக்கு வைரம்பாய்ச்சுகின்றவர்களும்அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள்எமது மனதளவு நன்றிக்கும்இ செயலளவு மரியாதைக்கும்உருத்துடையவர்களே. மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதஇ மனித சமூகத்தின்முதுகெலும்பாக விளங்குகின்ற 'ஆசிரியரை' கௌரவப்படுத்தும்நோக்கில்பல்வேறு சமய கலாசார மற்றும்நிறுவன நிகழ்வுகள்ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள்எனின்மிகையல்ல.
ஒக்டோபர் 05 'உலக ஆசிரியர்தினம்உலகளாவிய ரீதியில்பல்வேறு விதமாகக்
கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ நிறுவனம்ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும்முகமாக, 'ஆசிரியரின்தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்'என்ற கூற்றுடன்இ பொதுக்கல்விக்காக அல்லது சிறப்புத்துறையொன்றுக்காக அவர்களினால்ஆற்றப்பட்டு வரும்பங்களிப்பினை மரியாதை செய்யும்முகமாக, இவ்உலக ஆசிரியர்தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும்வருகின்றது.
பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன்மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள்கொண்டுள்ளன. அவரவர்சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும்விதத்தில்மாற்றங்கள்உள்ளன.
இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக்கொடுத்து காலில்விழுந்து வணக்கம்செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின்மாணவர்கள்தாம்அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் – கேட்டல்செய்வதை எவரும் குறையாகக்கருதுவதும்இல்லை.
அந்த வகையில்அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில்ஒரு கணம், ஒரு 'ஆசிரியர்தினம், அவசியம்தான்!!
.jpg)
0 comments :
Post a Comment