த.நவோஜ்-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலத்தடிச்சேனை என்னும் கிராமத்திலுள்ள முருகன் ஆலயத்தின் கொடித்தம்ப விநாயகர் சிலை உடைக்கப்பட்டு இயந்திரத் தகடு வெள்ளிக்கிழமை இரவு இனம்தெரியாதோரால் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மதவிவகாரத்துக்கான செயலாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் சனிக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இச்செயற்பாடான திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அண்மையில் சம்பூர் மக்களின் கிளிவெட்டி இடைத் தங்கள் முகாமில் வறுமை காரணமாக தமது உயிரை களுத்தை வெட்டி வதைக்கச் சென்ற தாமோதரம் குடும்பத்தினருக்கு அம்முகாமிற்கு சென்று முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.பாஸ்கரன் உலர் உணவு உணவியை வழங்கியுள்ளார்.
இதன் அச்சுறுத்தல் செயற்பாடே இச்சிலை உடைப்பு என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் மக்கள் கருத்து தெரிவித்தனர். இவ்விடயமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நிருவாகத்தினருக்கும். ஆலயத் தர்மஹர்த்தாக்களுக்கும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment