இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
மேற்படி நபி மொழி பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
1. அது தூய்மையின் பால் கட்டளையிடுகிறது.
2. உள்ளங்கள் அமைதியடையக்கூடிய இறை தியானத்தின் பால் ஆர்வமூட்டுகிறது.
3. பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் தர்மத்தின் பால் தூண்டுகிறது.
4. தௌஹீதின் (ஏகத்துவம்) பிற்பாடு மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றாகிய தொழுகையின் பால் ஆர்வமூட்டுகிறது.
5. மனித பண்புகளில் அதி உயர் பண்பாகிய பொறுமையின் பால் ஆர்வமூட்டுகின்றது.
6. அல்லாஹ்வின் வேதத்தின் பால் கவனம் செலுத்துமாறும் அதன் படி செயற்படுமாறும் தூண்டுதலளிக்கிறது.
7. அதே போல் இறைவழிகாட்டலின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் ஆத்மாவை பாதுகாத்துக் கொள்ள பிரயத்தனம் செய்யுமாறு தூண்டுகிறது.
மேற்படி நபி வழிச் செய்தியின் முதல் பகுதியாகிய சுத்தம் ஈமானின் பாதியாகும் என்ற பகுதியைப்பற்றி முதலில் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுத்தம் ஈமானின் பாதியாகும் இங்கு சுத்தத்தைக் குறிக்க அத்-தஹ{ர் எனும் வார்த்தைப் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையைப் பிரயோகித்திலும் அதற்குப் பொருள் கொள்ளுதலும்
அத்-தஹ{ர்: இதன் முதல் எழுத்து ழம்மு செய்யப்படுமாயின் அது செயலைக் குறிக்கும் மூலச் சொல்லாகும். அதன் முதல் எழுத்து பத்ஹ{ செய்யப்படுமாயின் அது சுத்தம் செய்யக் கூடிய பொருளைக் குறிக்கும். அது தஹாரா என்ற அறபுச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். அது புலன்களுக்குத் தெரியக்கூடிய தெரியாத அழுக்குகளிலிருந்து தூய்மையாகுதல் எனப் பொருள்படுகிறது. ஷரீஆ ரீதியாக தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை அகற்றுவதற்கான செயற்பாடு என்ற கருத்தைத் தருகிறது.
ஷத்ர்: எனும் அரபுச் சொல் ஒரு பொருளின் இரு பகுதிகளில் ஒன்றைக் குறிக்கும். ஆதலால் அத்தஹ{ரு ஷத்ருல் ஈமான் என்ற வாசகத்தின்; அர்த்தத்தில் அறிஞர்கள் பல கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறோம்.
1. தஹ{ர் என்பதன் கருத்து: பாவங்கள்ää பெரும்பாவங்களை விட்டு விடுவதன் மூலம் தூய்மைப் பெறுவதாகும். ஏனெனில் இதே கருத்தில் இன்னொரு குர்ஆனிய வசனமும் காணப்படுகிறது. (அவர்கள் தூய்மையான மனிதர்கள்- (அல்-குர்ஆன் : 16: 56) இங்கு தூய்மை என்பது ஓரினச் சேர்க்கை போன்ற பெரும்பாவங்களிலிருந்து தூய்மை பெறுவதை குறிப்;பதாகும். அதன் படி ஈமான் என்பது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை நன்மைகளை செய்வதும் விலக்கப்பட்டவைகளை விட்டு விடுவதுமாகும். விலக்கப்பட்டவைகளை விட்டு விடுவது என்பது தூய்மை பெறுவதாகும். இதனால் அது ஈமானின் பாதியாகிறது.
2. தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை நீர் அல்லது தயம்மும் செய்வதன் மூலம் நீக்குவதாகும். ஈமான் என்பது தொழுகையைக் குறிக்கிறது. ஈமான் என்ற சொல் தொழுகை என்ற அர்த்தத்திலும் அல்-குர்ஆனில் வந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் உங்கள் ஈமானை வீணாக்குபவனல்ல (பகரா: 143) இதன் கருத்து நீங்கள் பைதுல் முகத்திசைப் பார்த்து தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்குபவனல்ல என்hதாகும். தொழுகை சுத்தமின்றி நிறைவேறாது. இந்த கருத்தின் படி சுத்தம் (தஹ{ர்) அதன் ஒரு பகுதியாகும். இமாம் நவவி குறிப்பிடும் போது : இந்தக் கூற்று மிக நெருக்கமான கூற்றாகும். எனக் குறிப்பிடுகின்றார்கள். (முஸ்லிமின் விளக்கம் பாடம் சுத்தம்.)
3. தஹ{ர் என்பதன் அர்த்தம் வுழு செய்வதாகும். அது சிறிய பாவங்களை மன்னிக்கச் செய்கிறது. ஈமான் பெரும்பாவங்களை மன்னிக்கச் செய்கிறது அதனால் சுத்தம் ஈமானின் பாதியாக ஆகிவிடுகின்றது.
4. வார்த்தைகளில்ää செயற்பாடுகளில் ஈமானின் பண்பு யாதெனில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகிறது. நீரினால் சுத்தம் செய்வது உடம்பை சுத்தப் படுத்துகிறது. இதனால் ஈமானின் பண்புகள் இரு வகைப்படுகின்றன. ஒன்று வெளிப்பகுதியை சுத்தப்படுத்துவது மற்றையது உட்பகுதியை சுத்தப்படுத்துவதாகும்.
இது போன்ற இன்னும் பல்வேறு கருத்துக்கள் அறிஞர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது. என்றாலும் அத்தனைக் கருத்துக்களையும் பறைசாற்றுவதாகவே மேற்படி நபி வழிச் செய்தி அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
எனவே இஸ்லாம் எவ்வாறு ஒரு மனிதன் வெளியில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை விருப்புகின்றானோ அவ்வாறே அவன் உள சுத்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது.
இன்ஷா அல்லாஹ் இந்த நபி வழிச் செய்தியின் அடுத்தப் பகுதியாகிய இறைத்துதி பற்றி எமது அடுத்தத் தொடரில் பார்ப்போம். அதுவரை எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களையும் அகபுற சுத்தத்துடன் வாழ அருள் செய்வானாக.
0 comments :
Post a Comment