ஊவா மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாளை வெள்ளிக்கிழமை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தமெத்திவ் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதுடன் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள ஏனைய பாடசாலைகள் பல வாக்களிப்பு மத்திய நிலையங்களாகவும் பொலிஸார் பாதுகாப்பு கடமை இடங்களாகவும் இருப்பதால் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக விடுமுறை நாளொன்றில் பாடசாலைகள் திறக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை மூடப்படும் ஊவா மாகாண பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment