ஊவா மாகாணசபைத் தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை இணைந்து பதுளையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இடம்பெறும் மாபெரும் பிரச்சாரக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் ஒரே மேடையில் சேர்ந்திருப்பது மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக அங்கிருந்து எமது இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
பெருந்திரளான மக்கள் கூடியிருக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.






0 comments :
Post a Comment