பாறுக் சிகான்-
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பஸ் நடத்துநருக்கான நியமனங்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம். சமீர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வானது இன்று நற்பிட்டிமுனை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பணிமனையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது நற்பிட்டிமுனையை சேர்ந்த 07 பேருக்கு நியமனக்கடிதங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனங்கள் மாநகர சபை உறுப்பினரின் முயற்சியின் பலனாக கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment