நிந்தவுர் மதீனா மகாவித்தியாலயத்தின் முன்மாதிரி நடவடிக்கை

நிந்தவுர் மதீனா மகாவித்தியாலயத்தின் தரம் 5 மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட மருந்து வில்லைகள் வழங்கும் காகித உறைகளின் ஒரு தொகுதியை நிந்தவுர் பிரதேச வைத்தயசாலையில் இன்று (05.09.2014) கையளித்தனர். 

இதனை தரம் 5 மாணவத் தலைவன் செல்வன் எம்.எச். ஹானிப் ஹம்ஸாவிடம் இருந்து நிந்தவுர் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் ஆகில் அஹ்மத் ஷரிபுத்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

இந்நிகழ்வின்போது பாடசாலை அதிபர் ஜனாப் எஸ். அஹமது அவர்களுடன் ஆசிரியர் ஏ.எம். ஹமீஸ் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

மாணவர்களின் வாழ்க்கைத் தேர்ச்சியை மேம்படுத்துவதோடு அவர்களில் சமூகநல ஆர்வத்தையும் உண்டாக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்தப் பணி பாராட்டத்தக்கதும் முன்மாதிரி மிக்கதுமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :