ஜனாதிபதி சவால் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி -2014



அகமட்லெப்பை ஜுனைதீன் -

னாதிபதி சவால் கிண்ண மென்பந்து சுற்றுப்போட்டியின் வாழைச்சேனை கோட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு இன்று ஓட்டமாவடி அமீரலி மைதானத்தில் இடம்பெற்றது. இச்சுற்றுப்போட்டியில் கோரளைப்பற்று வாழைச்சேனை, கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அணிகள் கலந்து கொண்டன. 

அணிக்கு அறுவர் கொண்ட ஐந்து ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் 25 கழகங்கள் கலந்து கொண்டன. கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் மட்டக்களப்பு அமைப்பாளர் ஜுனைட் நளீமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மக நெகும தலைவர் கிங்க்சி ரணவக்க, 23வது படையணியின் கட்டளையதிகாரி பிரிகேடியர் அதுல கொடுப்பிலி , ஏறாவூர் நரசபை முதல்வர் அலிசாகிர் மௌலான, இளைஞ்ச்சர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் கே. தவராசா, உள்ளிட்ட அரச அதிகாரிகள், மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் கல்குடா வேலாங்க்கனி கழகமும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் டொப் ரேங் கழகமும் , கோரளைப்பற்று மத்தி செயலகப்பிரிவில் டோன் டச் கழகமும் முதலிடங்களை தனதாக்கி கிண்ணங்களை சுவீகரித்துக்கொண்டன. கோரளைப்பற்று மத்தி செயலகப்பிரிவின் இறுதிப்போட்டிகள் பகல் இரவு மின்னொளிப் போட்டியாக இடம்பெற்றமை இப்பிரதேச வரலாற்றின் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :