தேவாலய கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம்

நைஜீரியாவிலுள்ள தேவாலய கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசர மேலாண்மை இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

நைஜீரியாவின் லாகோஸ் நகருக்கருகேயுள்ள இகோடுன் பகுதியிலுள்ள தேவாலயமொன்றே இடிந்து விழுந்ததாக தேசிய அவசர மேலாண்மை இயக்கத்தின் தென்மேற்கு பகுதி ஒருங்கிணைப்பாளரான இப்ராகிம் பேரின்லோயி தெரிவித்துள்ளார்.

குறித்த தேவாலயம் இடிந்து விழுந்ததனால் ஏராளமானோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாகவும் மீட்பு படையினரின் தீவிர முயற்சியினால் 124 பேரை மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளிலிருந்து மீட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் குறித்த தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையிலே மீண்டும் நேற்று சனிக்கிழமை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக ஒருங்கிணைப்பாளரான இப்ராகிம் பேரின்லோயி தெரிவித்துள்ளார். 
எங்கள் தேசம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :