த.நவோஜ்-
வாழைச்சேனை பாசிக்குடாவிலுள்ள தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தின் மூன்று ஏக்கர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரவிய தீயினால் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் பாசிக்குடா கிளையின் உதவி முகாமையாளர் தெரிவித்தார்.
மேற்படி தென்னந்தோட்டத்தில் பரவிய தீயை மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தென்னை அபிவிருத்திச் சபை ஊழியர்கள், கல்குடா பொலிஸார், இராணுவம் ஆகியோர் இணைந்து கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
திடீரென ஏற்பட்ட தீயை உடனடியாக கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததால் 238 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள தென்னந்தோட்டத்தை ஓரளவு பாதுகாக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தென்னந் தோட்டத்தில் தீ ஏதேச்சையாக பரவியதா அல்லது யாராவது தீ வைத்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment