த.நவோஜ்-
வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயமாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் பத்து நாட்கள் திருவிழாவான இடம்பெற்று 29ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையும்.
வசந்த மண்டப பூசையை தொடர்ந்து இறைவன் உள் வீதி வலம் வந்து பின்னர் வாகனங்களில் வெளிவீதி உலா வலம் வந்து மாம்பழத் திருவிழாவில் நிகழ்வான திருவிளையாடல் சிறுவர்களினால் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது கலந்து கொண்ட பக்தர்களை கவர்ந்திருந்தது. திருவிளையாடல் இடம்பெற்று முடிந்த பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் ஞானப்பழம் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment