ஹரின் பெர்னாண்டோ பதவி ராஜினாமா!

க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சற்று முன்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதிர்ரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஹரின் பெர்னாண்டோ அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக ஹரின் பெர்னாண்டோ போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் நாளை ஹரின் பெர்னாண்டோ வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்கிய சபாநாயகர் ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :