அமைச்சர் உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு- படங்கள்

சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் 
தேசிய அமைப்பாளருமான, கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின் பேச்சாளர் தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின்ன் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து சிறப்பித்தார். 

அமைச்சருடன் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினறுமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை தவிசாளர் டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இம்றான் மஃறூப், பியந்த பத்திரன, எஸ்.தண்டாயுதபானி, கே.நாகேஸ்வரன், ஜே.ஜானரெத்னம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸிஸ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் உட்பட முப்படைத்தளபதிகள், உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொரு வருடமும் ரமழான்(நோன்பு) மாதத்தில் இந்த இப்தார் நிகழ்வு இடம் பெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :