தமிழ்க் கூட்­ட­மைப்பும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையை நடத்­து­வதில் தவ­றில்லை- அமைச்சர் ராஜித்த

தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு சந்­தேகம் நில­வு­கின்­றது. எனவே, இந்த சந்­தே­கத்தை போக்­கு­வ­தற்­காக அர­சாங்­கமும் தமிழ்க் கூட்­ட­மைப்பும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையை நடத்­து­வதில் தவ­றில்லை என்று மீன்­பிடி மற்றும் நீரி­யல்­வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தும் நோக்கில் அரசும் கூட்­ட­மைப்பும் பேச்சு நடத்­தலாம். இது தொடர்பில் இரண்டு தரப்­பி­னரும் கவனம் செலுத்­த­வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இது­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கலந்­து­கொள்­ளாமல் இருக்­கின்­றமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அண்­மையில் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்­பின்­போது தமிழ்க் கூட்­ட­மைப்பை தெரி­வுக்­கு­ழு­வுக்கு கொண்­டு­வர உத­வு­மாறு கேட்­டி­ருந்தார்.

ஏற்­க­னவே எட்­டப்­பட்­டுள்ள உடன்­பாட்டின் பிர­காரம் அர­சாங்­கத்­துடன் பேச்சு நடத்­தி­விட்டு அதில் ஏற்­படும் இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­வது குறித்து ஆரா­யலாம் என்று கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது.

இந்­நி­லையில் அமைச்சர் ராஜித்த சேனா­ரட்ன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் தேசிய பிரச்­சி­னைக்கு விரைவில் அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இது தொடர்பில் நான் ஆரம்ப காலத்­தி­லி­ருந்து வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்றேன்.

இந்­நி­லையில் தேசியப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான சிறந்த யதார்த்­த­க­ர­மான இட­மாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு காண­ப­ப­டு­கின்­றது. எனினும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இடம்­பெ­ற­மாட்டோம் என்று கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு தொடர்பில் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்ள சந்­தே­கத்தைப் போக்­கினால் மட்­டுமே அந்தக் கட்­சியை தெரி­வுக்­கு­ழு­வுக்குள் கொண்­டு­வர முடியும். அவ்­வாறு தமிழ்க் கூட்­ட­மைப்பின் சந்­தே­கத்தை போக்­வு­வ­தற்­காக அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையை நடத்­தலாம். இதனை தவிர வேறு வழி­யில்லை என்றே எனக்குத் தோன்­று­கின்­றது.

கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்ள சந்­தே­கத்தைப் போக்­கவும் அர­சாங்­கத்­துக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தவும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­து­வதில் தவ­றில்லை என்­பதே எனது நிலைப்­பா­டாகும்.

எனவே கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரும் முன்னர் அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் பேச்­சு­வார்த்தை நடத்தி ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வரலாம் என்­பதை வலி­யு­றுத்­து­கின்றோம். எவ்­வா­றெ­னினும் தேசியப் பிரச்­சி­னைக்கு யதார்த்­த­க­ர­மான தீர்வைக் காண்­ப­தற்கு பாரா­ளு­மன்றத் தெரிவுக்குழுவே பொருத்தமான சிறந்த இடம் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
எனினும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரப்போவதில்லை என்று கூட்டமைப்பு கூறிக்கொண்டிருப்பதால் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் புரிந்துணர்வை உருவாக்கவும் அரசும் கூட்டமைப்பும் பேச்சு நடத்தலாம். இது தொடர்பில் அரசாங்கம் கூட்டமைப்பும் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :