இலங்­கையில் அனைத்து துறையும் இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது

லங்­கையில் அனைத்து துறையும் இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இத்­த­கைய நிலை தொட­ரு­மே­யானால் லிபியா, ஈராக் போன்று எமது நாடும் மாறி­விடும் என மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அஸாத் சாலி எச்­ச­ரித்தார்.

மேலும் வடக்கில் காணி அப­க­ரிப்­ப­தற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­திற்கு தடை விதிக்க பொலி­ஸா­ரிற்கு முடி­யு­மாயின் ஏன் அளுத்­க­மவில் பொது பல சேனாவின் கூட்­டத்தை தடை செய்ய முடி­ய­வில்லை எனவும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்;

தற்­போது ஊவா மாகாண சபை கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில் தேர்தல் ஆணை­யாளர் பதுளை மாவட்­டத்­தி­னு­டைய பிர­தி­நி­தித்­து­வத்தை குறைத்து மொன­ரா­கலை மாவட்­டத்­தி­னு­டைய பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்க போவ­தாக குறிப்­பிட்­டுள்ளார். இது அசா­தா­ர­ண­மான செய­லாகும். ஐ.தே. கட்சி மீதான அச்­சத்தின் கார­ண­மா­கவே பது­ளையின் பிர­தி­நி­தித்­துவம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உயர் நீதி­மன்றம் அர­சாங்­கத்­தி­டமே காணப்­ப­டு­கி­றது. நீதி­மன்­றத்தை மதிக்­கா­ம­லேயே அர­சாங்கம் கடந்த காலங்­களில் செயற்­பட்டு வந்­துள்­ளது. இதற்கு முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க பதவி விலக்­கப்­பட்­டமை சிறந்த உதா­ர­ண­மாகும்.

இதே­வேளைஇ தற்­போது நாட்டின் அனைத்து துறையும் இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பாட­சா­லைக்கு சென்றால் அதி­பர்­படை வீரர்இ தூத­ர­கத்­துக்கு சென்­றாலும் படை வீரர் என அனைத்­திலும் இரா­ணுவ வீரர்கள் காணப்­ப­டு­கின்­றனர்.

இந்­நாட்டில் இரா­ணுவ ஆட்சி ஏற்­படும் அபாயம் உள்­ளது. இதனை நாங்கள் தொடர்ந்து கூறி வரு­கிறோம். அதே­போன்று கிராம உத்­தி­யோ­கத்­தர்­களின் நிலையும் அவ்­வாறே காணப்­ப­டு­கி­ற­துடன் இன்னும் சில நாட்­களில் இரா­ணுவ உடை­யி­லேயே கட­மைக்கு வரும் நிலை ஏற்­படும். மேலும், வடக்கில் காணி அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக யாழில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­திற்கு பொலிஸார் தடை விதித்­தனர்.

இந்­நி­லையில் தமிழ் மக்­களின் உரிமைப் போராட்­டத்­திற்கு பொலி­ஸா­ரினால் தடை விதிக்க முடியுமாயின் ஏன் அளுத்கமவில் பொதுபல சேனாவின் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியவில்லை.

எனவே, நாடு இராணுவ மயப்ப டுத்தப்பட்டு வருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :