அர­சாங்கம் ஏன் கூட்­ட­மைப்பின் யோச­னை­களை கேட்க வேண்டும்?

ய்வு பெற்ற நீதி­ப­தி­யொ­ருவர் வட­மா­காண சபை முத­ல­மைச்­ச­ராக பதவி வகிக்க முடி­யு­மென்றால் ஏன் இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்வு பெற்ற ஒருவர் வட­மா­காண சபை ஆளு­ந­ராக பதவி வகிக்க முடி­யாது? எனக் கேள்­வி­யெ­ழுப்பும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­தோடு எந்­த­வொரு இணக்­கப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளாத நிலையில் அரசு ஏன் கூட்­ட­மைப்பின் யோச­னை­களை கேட்க வேண்­டு­மென்றும் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்;

இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்கு அமைய மாகாண ஆளு­நரை நிய­மிக்கும் அதி­கா­ரமும் பதவி வகிக்கும் ஆளு­நரின் பதவி நீடிப்பை மேற்­கொள்­வ­தற்­கு­மான அதி­காரம், நிறைவேற்று அதிகாரமும் கொண்ட ஜனா­தி­பதி உள்­ளது.

அதற்­க­மை­யவே ஜனா­தி­பதி வட­மா­காண ஆளு­ந­ராக மீண்டும் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சி­றியின் பத­விக்­கா­லத்தை நீடித்­துள்ளார். அத்­தோடு வட­மா­கா­ணத்தை சார்ந்த பெரும்­பா­லான அரச ஊழி­யர்கள் சந்­தி­ர­சிறி ஆளு­ந­ராக பதவி வகிப்­பதை விரும்­பு­கின்­றனர்.

எனவே தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் எதிர்ப்பு என்­பது வெறு­மனே அர­சியல் உள்­நோக்­கங்கள் கொண்­ட­தாகும். கிழக்கு மாகாண சபை ஆளு­நரின் பத­விக்­காலம் நீடிக்­கப்­பட்ட போது கூட்­ட­மைப்­பினர் எதிர்க்­க­வில்லை. மெள­ன­மா­கத்தான் இருந்­தார்கள்.

இன்று வட­மா­காண சபை ஆளு­னரின் பத­விக்­கா­லத்தை நீடிக்கும் போது மட்டும் அவர் இரா­ணு­வத்தை சேர்ந்த ஓய்வு பெற்­றவர் என்­பதால் எதிர்ப்­ப­தாக கூறு­கின்­றனர்.

இவர்­க­ளிடம் ஒன்றைக் கேட்க விரும்­பு­கின்றேன். ஓய்வு பெற்ற நீதி­ய­ர­ச­ரான சி.வி. விக்கி­னேஸ்­வரன் வட­மா­காண சபை முத­ல­மைச்­ச­ராக பதவி வகிக்க முடி­யு­மென்றால் ஏன் ஓய்வு பெற்ற இரா­ணு­வத்தை சேர்ந்த சந்­தி­ர­சிறி ஆளு­ந­ராக பதவி வகிக்க முடி­யாது.

அத்­தோடு, கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கத்­தோடு எந்த வித­மான இணக்­கப்­பாட்­டையும் கண்டு அதற்­க­மைய அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இவ்­வா­றா­னதோர் நிலையில் அர­சாங்கம் ஏன் கூட்­ட­மைப்­பி­னரின் யோச­னை­களைக் கேட்க வேண்டும் அதற்­கான அவசியமே கிடையாது.

ஆளுனரை நியமிப்பதும் பதவிக்காலத்தை நீடிப்பதும் ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரத்தை தட்டிப்பறிக்கவோ, விமர்சிக்கவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
VK
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :