தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை தடை செய்ய வேண்டும்










ர்­வ­தே­சத்தின் முன்­னி­லையில் அர­சாங்­கத்தை குற்­ற­வா­ளி­யாக்கும் வகையில் இலங்­கையில் இடம்­பெறும் அனைத்து ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட வேண்டும். நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் வகையில் செயற்­படும் அனை­வரும் தேசத்­து­ரோ­கி­களே என்று தெரி­விக்கும் அர­சாங்க பங்­காளிக் கட்­சிகள், நாட்டின் சட்­ட­திட்­டங்­களை மீறியும் நீதிக்கு முர­ணா­கவும் செயற்­படும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன. 

தமிழ் மக்கள் மீதான அடக்கு முறை­களை கண்­டித்து வடக்கில் கூட்­ட­மைப்பு மற்றும் சிவில் அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொள்­வ­தாக தெரி­வித்­துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்­பினை தெரி­விக்கும் வகை­யி­லேயே இக் கட்­சிகள் கருத்து வெளி­யிட்­டுள்­ளது.

ஜாதிக ஹெல உறு­மய

இது தொடர்பில் ஜாதிக ஹெல உறு­ம­யவின் உறுப்­பி­னரும் மேல் மாகாண அமைச்­ச­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­விக்­கையில்;

அர­சாங்­கத்தை குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சியில் இன்று நாட்டில் பல செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு எதி­ரான சர்­வ­தேச சந்­திப்­புக்­க­ளையும், இலங்­கைக்குள் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் சிவில் அமைப்­புகள் மேற்­கொண்டு வரு­கின்­றன. தமிழ் மக்­களின் உரி­மைகள் என்ற கொள்­கை­யி­லேயே முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் விடு­தலைப் புலிகள் போராட ஆரம்­பித்­தார்கள். இறு­தியில் தமிழ் மக்­களின் உரி­மை­களை மதிக்­காது தமது சுய­ந­லத்­திற்­காக ஆயு­த­மேந்தி போராட ஆரம்­பித்­ததன் விளைவு என்­ன­வா­னது என்­பதை இன்று அனை­வரும் உணர்ந்­தி­ருப்­பார்கள்.

எனினும் வடக்கில் மீண்டும் ஒரு­முறை போராட்­டத்­ததை ஆரம்­பிக்கும் வகையில் சர்­வ­தேச அமைப்­பு­க­ளுடன் இணைந்து புலி­களை ஆத­ரிக்கும் இங்­குள்ள சிவில் அமைப்­பு­க­ட­களும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் முயற்­சிக்­கின்­றது. தமிழ் மக்­களின் உரி­மைகள் என்ற பெயரில் சர்­வ­தே­சத்­திற்கு தேவை­யான வகையில் தமிழ் மக்­களை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக திருப்பும் முயற்­சி­யி­னையே இவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். 

நாட்­டிற்கு எதி­ராக சட்­டங்­க­ளையும் நீதி­யையும் மதிக்­காது செயற்­படும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை உட­ன­டி­யாக தடை செய்து நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும். இன­வா­தத்தை தூண்டும் இவர்­களை கைது செய்து இவர்­களின் அமைப்­புக்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

தேசிய சுதந்­திர முன்­னணி

இது தொடர்பில் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் மொஹமட் முசம்மில் தெரி­விக்­கையில்;

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமது பிரி­வி­னை­வாதக் கொள்­கை­யினை வடக்கு தமிழ் மக்கள் மத்­தியில் பரப்பி தனி நாட்­டினை வடக்கில் உரு­வாக்கும் முயற்­சி­யினை மேற்­கொண்டு வரு­கின்­றனர். தமிழ் மக்­க­ளுக்கு இப்­போது தேவைப்­ப­டு­வது ஆர்ப்­பாட்­டங்­களோ, புரட்­சி­களோ அல்ல. அவர்­க­ளுக்கு அமை­தி­யான சூழலை உரு­வாக்­கிக்­கொ­டுக்க வேண்­டி­யதே இப்­போ­தைய தேவை­யாக உள்­ளது. ஆயினும் அர­சாங்கம் அதற்குத் தயா­ராக இருந்­தாலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அதற்கு இடம்­கொ­டுக்­காது செயற்­ப­டு­கின்­றது.

நாட்டின் பாது­காப்­பிற்கு எதி­ராக எவரும் செயற்­பட்டால் அது குற்­ற­மாகும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இக் குற்­றத்­தி­னையே தற்­போது செய்து வருகின்றது. இதை உடனடியாக இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாக செயற்பட்டு தமக்கென சட்ட திட்டங்களை மீறி செயற்படுவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு உள்நாட்டிற்குள் மக்களை தூண்டி விடுவது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.
விகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :