கீழ் தர­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களின் செயற்­பாட்டை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும்- ஞான­சார தேரர்

ளுத்­கம சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உண்­மைக்குப் புறம்­பான செய்­தி­களை சர்­வ­தே­சத்­திற்கு எடுத்துச் செல்லும் கீழ் தர­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களின் செயற்­பாட்டை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெ­ல­விடம் வேண்­டுகோள் விடுத்த பொது­ப­ல­சே­னாவின் கல­கொட அத்தே ஞான­சார தேரர், மக்­க­ளு­டைய வரிப்­ப­ணங்­களை கொண்டு இயங்கும் அரச ஊட­கங்கள் உண்­மைக்குப் புறம்­பான செய்­தி­களை வெளி­யிட முடி­யா­து. எனவே அரச ஊட­கங்கள் தேசிய பொறுப்­பினை மீறி செயற்­பட முடி­யாது.
இவ்­வி­ட­யத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கோரி­யுள்ளார்.மக்கள் தொடர்­பாடல் மற்றும் தக­வல்­துறை அமைச்சுக்கு நேற்று சென்ற பொது­ப­ல­சேனா அதன் அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெ­லவை சந்­தித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்கை தேச­மா­னது வர­லாற்று பூர்­வ­மாக சிங்­க­ள­வர்­க­ளுக்குச் சொந்­த­மா­னது. இத்­த­கைய நிலையில் அளுத்­கம, பேரு­வளை, தர்கா நகரில் எதிர்­பா­ராத வண்ணம் இடம்பெற்ற வன்­முறை தொடர்பில் உண்­மை­யான செய்­தி­களை மூடி மறைத்து உண்­மைக்குப் புறம்­பான செய்­தி­களை சர்­வ­தே­சத்­திற்கு எடுத்துச் செல்­வ­தற்கு சில ஊட­க­வி­ய­லா­ளரே கார­ண­மாகும்.

எனவே, பௌத்த மற்றும் ஏனைய இனத்தை சார்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில தூது­ர­கத்­தி­ட­மி­ருந்து பணம் பெற்று கீழ் தர­மான முறையில் செயற்­பட்­ட­மை­யினால் இந்­நாட்டின் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் பிக்­கு­க­ளுக்கும் அவ­ம­ரி­யாதை ஏற்­பட்­டுள்­ளது.

விஷே­ட­மாக, மக்­க­ளு­டைய வரிப்­ப­ணங்­களை கொண்டு செயற்­படும் அரச ஊட­கங்­க­ளான தேசிய ரூப­வா­ஹினி, சுயா­தீன தொலைக்­காட்­சிகள் உண்­மைக்குப் புறம்­பான செய்திகளை வெளியிட்டு தேசிய பொறுப்பினை தட்டி கழித்து செயற்பட முடியாது. எனவே, இந்நாட்டின் பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கும் நியாய கிடைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :