மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி, ரிதிதென்ன பிரதேசத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஹஸரத் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது இஸ்மாயில் முஹம்மது சரீப் நௌபர் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த வான் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் பின்னர் குறித்த வான் நிற்காமல் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment