அமைச்சர் ஹக்கீம் அரசிலிருந்து வெளியேறவும் என்ற செய்தியில் உண்மையில்லை-ஹஸன் அலி


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க இருவரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரச தீர்மானங்களுக்கு செவிசாய்க்காமல் காலிழுத்துக் கொண்டு இருப்பவர்களும்,சர்வதேச ரீதியாக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்களும், நான் வெளியேற்றுவதற்கு முன்பு அவர்களாகவே வெளியேறுவது நல்லது எனவும் ஜனாதிபதி கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் மாமனாரான கரு ஜெயசூரிய பொது அபேட்சகராகக் களமிறங்குவது தொடர்பில்,தனக்கும் ஐ.தே.கவில் உரிமையிருக்கிறது என்று நவீன் திசாநாயக்க கருத்து வெளியிட்டிருந்தமை ஜனாதிபதியை சினம் கொள்ளச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக இம்போட்மிரர் முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :