பைஷல் இஸ்மாயில்-
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவின் கிளைக்குழு தெரிவு செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.காவின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் மு.காவின் உயர் பீட உறுப்பினர் யூ.எம்.வாஹீட் சேர் ஆகியோர் கிளைக்குழுவின் தாப்பரியம் பற்றியும் அதில் அங்கம் பெறுகின்றவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும், கிளைக்குழுவை எவ்வாறு நடாத்தவேண்டும் என்பன பற்றி மிகத் தெளிவான விளக்கத்தினை பற்றி உரையாற்றினர்.
ஆட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவு கிளைக்குழு செயலாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம்.மனாஸிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆவணங்களை கையளித்து வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment