வெள்ளவத்தை, தெஹிவளை நோலிமிட்டுக்கு அச்சுறுத்தல்- ஐவர் கைது

கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்துபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த இரண்டு நிறுவனங்களையும் மூடிவிடுமாறு அச்சுறுத்தல் விடுத்தவர்களே கைதுசெய்யப்படடுள்ளனர்.

இன்னும் இரண்டு பேர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாணந்துறையில் நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரையான போது அங்கு பொருத்தப்பட்டிருந்த 24 கண்காணிப்பு கமராக்களும் முற்றாக எரிந்துள்ளன.

எனவே அதன் தரவுகளை மீளப்பெற முடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :