பைஷல் இஸ்மாயில்-
அளுத்கம மற்றும் தர்காநகர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று கொண்டு சென்று கையளித்தனர்.
இந்த நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீரவுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அத்துடன் இந் நிவாரணப்பொருட்களைச் சேகரிக்க முன்னின்று உதவிய அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.அன்சில், துணைத் தவிசாளார் ஏ.எல்.அமானுல்லா, உறுப்பினர்களான. ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், எஸ்.எல்.முனாஸ், மற்றும் அட்டாளைச்சேனை ஜும்ஆப்பெரிய பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிருவாகத்தினர், இவர்களுடன் இணைந்து செயல்பட்ட சகோதரர்கள், இளைஞர்கள், உதவிய தனவர்ந்தர்கள், சேனைத்தமிழ் உலா குழுவினர்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நன்றி கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment