.சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் ஆறாவது தின நினைவு நிகழ்வு

 த.நவோஜ்-

ட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர்.சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் ஆறாவது தின நினைவு நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆறாவது தின நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்திய வரும், எமது கோணேச பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் ஆறாவது தின நினைவு நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியில் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்க தலைவர் எஸ்.செல்வேந்திரன், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க உறுப்பினர் எஸ்.சிவபாதசுந்தரம், பேரவையின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :