என்னைக் கைது செய்தால் பல உண்­மை­களை வெளிப்­ப­டுத்­துவேன்! -மங்­கள சம­ர­வீர


நான் வெளி­யிட்ட கருத்­துக்கள் தொடர்பில் எந்­த­வொரு விசா­ர­ணைக்கும் முகம் கொடுக்க தயா­ராக உள்ளேன். என்னை கைது செய்­தாலும் அர­சாங்­கத்தின் மோச­டிகள் தொடர்பில் இன்னும் பல உண்­மை­களை வெளிப்­ப­டுத்­துவேன் என தெரி­வித்த மங்­கள சம­ர­வீர எம்.பி., அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் பாது­காப்பு செய­லா­ளரே உள்ளார் எனவும் குறிப்­பிட்டார்.
மங்­கள எம்.பி. வெளி­யிட்ட கருத்­துக்கள் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பித்­துள்ள நிலையில் இது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டின் குழப்­ப­க­ர­மான சூழ­லுக்கு இந்த அர­சாங்­கமே முழுப் பொறுப்­பி­னையும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம் தமிழ் இனத்­தவர் மிக கொடூ­ர­மாக தாக்­கப்­ப­டு­கின்­ற­மைக்கும் சிங்­கள மக்­களின் மத்­தியில் இன­வா­தத்­தினை பரப்பி நாட்டில் அமை­தியை சீர­ழிக்­கின்­ற­மைக்கும் அர­சாங்­கமே காரணம்.

இன்று அர­சாங்­கத்தின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக புல­னாய்வு பிரி­வினை பயன்­ப­டுத்தி பல அட்­டூ­ழி­யங்­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றனர். நான் வெளி­யிட்ட கருத்­துக்கள் அனைத்தும் உண்­மை­க­ளே­யாகும்.

அதேபோல் நான் குறிப்­பிட்ட கருத்­துக்கள் பாது­காப்பு பிரிவின் இர­க­சி­யங்­களோ அல்­லது இந்த நாட்டை பாதிக்கும் இர­க­சிய தக­வல்­களோ அல்ல. இவை இந்த நாட்டில் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அட்­டூ­ழி­யங்­களும் அதற்கு துணை போகும் நபர்­களின் பெயர்­க­ளு­மே­யாகும்.
இதை வெளி­யி­டு­வது இந்த நாட்டை நேசிப்­பவன் என்ற வகையில் எனது கட­மை­யாகும். எனது கட­மை­யி­னையே நான் செய்­துள்ளேன்.


கேள்வி: நீங்கள் வெளி­யிட்ட கருத்­தினால் இப்­போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதே?

பதில்: எனது கருத்­துக்கள் நான் ஊட­கங்­களின் முன்­னி­லையில் வெளி­யிட்ட தக­வல்கள் அனைத்தும் உண்மை. புல­னாய்வு பிரிவின் தக­வல்­களை வெளி­யிட்­ட­த­னாலோ அல்­லது பாது­காப்பு செய­லாளர் செய்யும் தவ­று­களை வெளி­யிட்­ட­த­னாலோ இவர்கள் என்னை விசா­ரிக்க போவ­தில்லை. அவர்கள் தொடர்­பான உண்­மை­களை வெளி­யிட்­டதே இப்­போது இவர்­களின் பிரச்­சி­னை­யாக உள்­ளது. எனது கருத்­துக்கள் தொடர்பில் என்­மீது எந்­த­வொரு விசா­ர­ணை­யினை மேற்­கொண்­டாலும் அதற்கு முகம்­கொ­டுக்க நான் தயா­ரா­கவே உள்ளேன். நான் எதற்கும் அஞ்­சப்­போ­வ­தில்லை.

கேள்வி: புல­னாய்வு பிரிவு தொடர்பில் நீங்கள் வெளி­யிட்ட செய்­தி­க­ளுக்­கான ஆதாரம் உங்­க­ளிடம் உள்­ளதா..?

பதில்: இந்த அர­சாங்கம் செய்யும் கடந்த காலங்­களில் செய்த குற்­றங்கள் தொடர்பில் சகல ஆதா­ரங்­களும் என்­னிடம் உள்­ளது. புல­னாய்வு பிரி­வினை பயன்­ப­டுத்தி இந்த அர­சாங்கம் பெரிய குற்­றங்­களை செய்து கொண்­டி­ருக்­கின்­றது.
அளுத்­கம இனக்­க­ல­வரம் மட்­டு­மல்ல இன்றும் சில சம்­ப­வங்கள் அர­சாங்­கத்தின் ஆத­ர­வுடன் பாது­காப்பு செய­லா­ளரின் கட்­ட­ளை­யுடன் இடம்­பெற்­றுள்­ளது. என்னைக் கைது செய்­தாலும் இல்லாவிட்­டாலும் இந்த அர­சாங்­கத்தின் மோச­டிகள் தொடர்­பி­லான இன்னும் பல உண்­மை­களை வெளி­யி­டுவேன். இந்த நாட்டில் அப்­பாவி மக்­களை கொடு­மைப்­ப­டுத்தும் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு இனி­மேலும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

கேள்வி: பாது­காப்பு செய­லாளர் மீது வெளிப்­ப­டை­யா­கவே குற்றம் சுமத்­து­வது ஏன்?

பதில்: நாட்டில் இரா­ணுவ ஆதிக்கம் அதி­க­ரிப்­ப­தற்கும் தீவி­ர­வாத அமைப்­புகள் பலப்­ப­டு­வ­தற்கும் பாது­காப்பு செய­லாளர் காரணம் என நான் கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தெரி­வித்து விட்டேன். இப்­போது குறிப்­பி­டு­வது புதிய விட­ய­மல்ல. இன்று பொது­ப­ல­சேனா என்ற பௌத்த அமைப்பு தலை­தூக்­கவும் அவர்கள் சிறு­பான்மை இனத்­திற்கு அடக்கு முறை­களை பயன்­ப­டுத்­தவும் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜபக்சவே காரணம். அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பு செயற்­பட்­டது என்­பதே உண்மை. இவ் அமைப்­பிற்­கான உத­வி­க­ளையும் பாது­காப்­பி­னையும் பாது­காப்பு செய­லா­ளரே செய்­துள்ளார்.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் பொது­ப­ல­சேனா அமைப்­பினை இவர் சந்­தித்­துள்ளார். இவ்­வா­றான பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு துணை­போகும் செய­லையும் பொது­ப­ல­சே­னா­வுக்கு உத­வி­க­ளையும் பாது­காப்­பி­னையும் வழங்­கு­வது பாது­காப்பு செய­லா­ளரே. அவர்­க­ளுக்­கி­டையில் நெருங்­கிய தொடர்பு உள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகளையும் இவரே செய்து கொண்டுள்ளார்.

இலங்கையில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த இனிமேல் இடமளிக்கக்கூடாது. சர்வதேச சக்திகள் அரசாங்கத்திற்கு எதிராக பலமடைந்து விட்டன. இனிமேல் இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அடக்கு முறைகளை கையாள்வது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இது சிங்கள மக்களையே பாதிக்கும் என்பதை இந்த அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :