மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியான வாகனேரிப் பகுதியில் வாகன விபத்து-படங்கள் இணைப்பு



த.நவோஜ்-

மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியான வாகனேரிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னல பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து கொழும்பை நோக்கிப் போய்க் கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் வாகனேரிப் பகுதியில் வைத்து மோதியதில் காரின் சாரதியும், காரில் பயணித்த ஒருவமான இரண்டு பேர் காயமடைந்த நிலையில் பொலனறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :