தாய்லாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் 4 முஸ்லிம் வீரா்கள் - அணியின் விபரம்




எஸ்.எம்.அறூஸ்-
தாய்லாந்தில் நடைபெறவுள்ள தாய்லாந் ஓபன் சம்பியன்சிப் போட்டியில் கலந்து கொள்வதற்கான இலங்கை மெய்வல்லுநர் குழு தாய்லாந்து பயணமாகியுள்து.

14 பேர் கொண்ட இலங்கை குழு இம்மாதம் 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை தாய்லாந்தின் பதும்தானி நகரிலுள்ள தம்மாசட் பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் போட்டிகளில் பங்கு கொள்ளவுள்ளது.

இலங்கைக் குழுவில் சிஹான் அம்பேபிட்டிய 100 மீற்றர், மஞ்சுல குமார உயரம் பாய்தல், சந்திரிக்கா சுபாசினி 400 மீற்றர், முகம்மட் சப்ரான் 100 மீற்றர் போன்ற முக்கிய வீரா்களும் இடம்பெறுகின்றனர்.

இலங்கை அணியில் இடம்பெறும் வீரா்களின் விபர் வருமாறு,

ஆண்கள் பிரிவி்ல், ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கான் 200 மீற்றர், சிஹான் அம்பேபிட்டிய 100 மீற்றர், ஏ.எல்.எம்.அஸ்ரப் 100 மீற்றர், முகம்மட் சப்ரான் 100 மீற்றர், மஞ்சுல குமார உயரம் பாய்தல், தினேஸ் பெர்னாண்டோ முப்பாய்ச்சல், எம்.எஸ்.எம்.சலீம்டீன் 400 மீற்றர், அகில சானக்க பெர்னாண்டோ வேக நடை, டி.எல்.சமரஜீவ 5000 மீற்றர்.

பெண்கள் பிரிவில், சந்திரிக்கா சுபாசினி 400 மீற்றர், ஜானி சந்துரங்க டி சில்வா 100 மீற்றர், ஜி.டி.ஏ.அபேரத்ன 1500 மீற்றர், நிமாலி 800 மீற்றர், கீதானி ராஜசேகர 5000 மீற்றர், தமயந்தி வேக நடை ஆகி வீர, வீராங்கனைகள் தாய்லாந்து செல்கின்றனர்.

இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜாஸ்கான் மற்றும் அஸ்ரப் ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெற்று வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

 அதிலும் இலங்கையின் மெய்வலலுநர் அணி ஒன்றில் ஒரே நேரத்தி்ல் நான்கு முஸ்லிம் வீரா்கள் இடம்பெற்றிருப்பதும் ஒரு வரலாற்றுச் சாதனையாக பதியப்பட்டுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் சார்பில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அதன் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தெரிிவத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :