நடிகர் ரஜினிகாந்த்தை வைகோ திடீரென சந்திப்பு

டிகர் ரஜினிகாந்த்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசியுள்ளார். கடந்த 6ஆம் திகதி நடந்த இந்த சந்திப்பு குறித்த படத்தை ம.தி.மு.க தற்போது வெளியிட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று மாலை பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ரஜினிகாந்த்தை வைகோ சந்தித்து பேசியதாக ம.தி.மு.க இரண்டு பேர் ஒன்றாக இருக்கும் படத்தை இன்று வெளியிட்டுள்ளது. 

ஏப்ரல் 6 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இல்லம் சென்றார் என்றும், அப்போது, ரஜினிகாந்த், வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது என்றும், அப்போது, நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரியதை நூலை வைகோ, ரஜினிகாந்த்திடம் கொடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :