அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற உலக வங்கியின் அவசர கடன் திட்டத்தை பெறும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
ஆழிப்பேரலை, சூறாவளி போன்ற அனர்த்தங்கள் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக இந்த கடன்களை வழங்கும் திட்டம் உலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் கீழ் இலங்கைக்கு 102 மில்லியன் டொலர்களை வழங்க அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமைகளின் போது ஏழ்மையான மக்களே அதிக அளவில் பாதிப்படைகின்றனர்.
இந்த நிலையில் உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கடன் நிதி வழங்கப்படுவதாக உலக வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
.jpg)
0 comments :
Post a Comment