ஐ.நா விசாரணை : முத்தையா முரளிதரனையும் பாதித்து விட்டதாம்

லங்கை மீதான சர்வதேச விசாரணைகளுக்கு ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ்வேளையில் முன்னளாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது தொண்டு நிறுவன செயற்பாட்டையும் இது பாதித்துள்ளது.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென இலங்கை அரசு அறிவித்திருக்கும் இவ்வேளையில் குறித்த அமைப்பின் செயற்பாடுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை விஜயம் மேற்கொள்ளவிருந்த இரு ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பயணத்தை ரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஐக்கிய இராச்சியம், வொஷிங்டன் மற்றும் சன்டர்லன்ட் மேற்கு பிரதிநிதிகளான திருமதி ஹொட்சன் மற்றும் ஸ்டீபன் ஹெப்பர்ன் ஆகிய இருவருமே இவ்வாறு தாம் தமது திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

லேபர் கட்சியைச் சேர்ந்த இவ்விருவருக்கும் முரளிதரனின் தொண்டு நிறுவனத்தின் செலவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அதேவேளை கடந்த வாரம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என தெரிவித்த விடயம் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்தே தமது பயணத்தை கைவிடுவதாகவும் திருமதி ஹொட்சன் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :