சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென இலங்கை அரசு அறிவித்திருக்கும் இவ்வேளையில் குறித்த அமைப்பின் செயற்பாடுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை விஜயம் மேற்கொள்ளவிருந்த இரு ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பயணத்தை ரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஐக்கிய இராச்சியம், வொஷிங்டன் மற்றும் சன்டர்லன்ட் மேற்கு பிரதிநிதிகளான திருமதி ஹொட்சன் மற்றும் ஸ்டீபன் ஹெப்பர்ன் ஆகிய இருவருமே இவ்வாறு தாம் தமது திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
லேபர் கட்சியைச் சேர்ந்த இவ்விருவருக்கும் முரளிதரனின் தொண்டு நிறுவனத்தின் செலவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அதேவேளை கடந்த வாரம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என தெரிவித்த விடயம் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்தே தமது பயணத்தை கைவிடுவதாகவும் திருமதி ஹொட்சன் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment