ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சின் 35 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் இறக்காம பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்ட சமூக சேவைகள் பராமரிப்பு நிலையத் திறப்பு விழாவும், விசேட தேவையுடையவர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் எம்.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை ஊறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல், பிரதேச சபைத் தலைவர்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
சமூக சேவைகள் அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட பிரதேச செயலகத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம், கணனி என்பன வழங்கப்பட்டதோடு, விசேட தேவையுடையவர்கள் என இனங்காணப்பட்ட 50 பேருக்கு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment