அநுராதபுரம் திறப்பனே பிரதேச சபை நவீன கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு- படங்கள்

ஜே.எம்.வஸீர்-
ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்த உள்ளுராட்சி சபைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் (அநுராதபுரம்) திறப்பனே பிரதேச சபை நவீன கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டதிற்காக 43 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதுடன் புறநெகும திட்டத்தில் மொத்தமாக 108 வருமாணம் குறைந்த உள்ளூராட்சி சபைகள் இனங்காணப்பட்டு அதனுள் 56வது இடத்திலுள்ள சபையாக திறப்பனே பிரதேச சபை காணப்படுகின்றது.. 

இக்கட்டிட வேலைத்திட்டம் 2015 மார்ச் மாதம் நிறைவு பெறவுள்ளது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா...மக்களுக்காக மக்களின் காலடியில் நெருங்கி சேவையாற்றக்கூடிய ஒரே நிறுவனம் என்றால் அது உள்ளுராட்சி சபைகளாகும். அதற்கமையவே நமது ஜனாதிபதி அவர்கள் நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளை அபிவிருத்தி செய்ய வழிகாட்டுகின்றார். அதன் பிரகாரம் எனது அமைச்சு நாட்டிலுள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளினதும் தேவைகளை இனங்கண்டு அவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது என அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க , வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்;. எம். ரஞ்சித் திறப்பனே பிரதேச சபை தவிசாளர் ச இலங்கசிங்க ,உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, புறநெகும செயற்த்திடடத்தின்பணப்பாளர் ஆனந்த கமகே மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :