எஸ்.நஸீப் முஹம்மட், எம்.என். நெளசாத்-
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு வந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் வண்டியொன்று இன்று இரவு 9.50 மணியளிவில் மோட்டார் வண்டியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து சியம்பலாண்டுவ வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் வண்டியை ஓட்டிச்சென்ற நபர் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதே வேளை பஸ்ஸில் பணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment