இரண்டு வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த இம்போட்மிர்ர் நெற்வேர்க் புதுப்பொலிவுடன் புதுயுகம் படைக்க தயாராக தனது முன்னெடுப்புக்களை மேற்கொண்டு செல்கின்றது. இம்போட்மிர்ர் மீடியா நெட்வேர்க்கின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் நேற்று இடம்பெற்றது.
மேற்படி இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர் ஏ.எம்.ஜெமீல்,ஏ.எல்.எம்.நஸீர், மற்றும் சிறப்பு அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.தஹீர் அஷ்ரப், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யூ.கே.ஜபீர். கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லா, அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.உவைஸ், ஏ.எல்.றியாஸ், என்.எம்.யாசீர் ஐமன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான முஸ்மி. றியாஸ் மற்றும் அதிதிகளாக: பிரை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் மீரா இஸ்ஸடீன், மருதமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் என்.முபீன் ,கவிஞர் கலாபூஷனம் ஆசுகவி அன்புடீன், மற்றும் கல்விமான்கள் கவிஞர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது “ஒலியமுதம்” நூல் வெளியீடும் அதிகள் மற்றும் இம்போட் மிரரின் சிரேஸ்ட அறிவிப்பாளர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகள் யாவும் இம்போட்மிரர் மீடியா நெட்வேர்க்கின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல். முனாஸ் அவர்களின் தலைமையில் இடம்பற்றது குறிப்பித்தக்கது.
0 comments :
Post a Comment