பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் நிமால்

லால் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பொதுபல சேனா அமைப்பு இஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் . கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது .

அவர் மேலும் , பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அரசாங்கத்திற்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

மதம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இன்னுமொரு மதத்தை விமர்சிப்பது பொருத்தமற்றது. பொலிஸாரும், நீதிமன்றமும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .LM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :