ஜனாதிபதியை தீர்மானிப்பது ரவூப் ஹக்கீம் என்றால் அரசு ஏன் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் கேட்க உள்ளேன் என்று பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துளளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதைத் தீர்மானப்பவர்கள் நாங்களே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் தெரவித்ததாவது,
அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிப்பது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்று ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். ரவூப் ஹகீமால் அப்படி ஒன்று செய்ய முடியுமாயின் தேர்தல் ஆணையானர் ஒருவர் தேவையில்லையே என நான் தேர்தல் ஆணையாளரிடம் கேட்க உள்ளேன்.
ஆனால் 2016 ம் ஆண்டு ஜனாதிபதியை தீர்மானிப்பது பொதுபல சேனாவாகும். அதற்கான திட்டத்தை தற்போதே மேற்கொண்டு உள்ளோம். எமது இயக்கத்தில் 20 இலட்சம் அங்கத்தவர்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment