காதல் விவகாரம் காரணமாக காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் - யாழில் சம்பவம்

யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பழகி வந்துள்ளார்.

இவர்கள் இருவரின் தொடர்பு குறித்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து, குறித்த பெண்ணின் தாயார் பொலிஸ் உத்தியோகத்தரிடம் தனது மகளை போன்று பேசி வீட்டிற்கு அழைத்துள்ளார்.

தன்னுடன் பழகும் பெண் அழைத்தாக நம்பிய பொலிஸ் உத்தியோகத்தர், பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த குறித்த பெண்ணின் சகோதரன் மற்றும் தாயார் இணைந்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலிலிருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தப்பியோடி யாழ். பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :