தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வேடிக்கை பார்க்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 86 பேரை மீ்ட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளையும் மீட்க வேண்டும் என்று கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். மத்திய அரசு மௌனமாக இருப்பதால் இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு தொடர்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

0 comments :
Post a Comment