கூட்டமைப்பின் சமிக்ஞையை புரிந்து மக்களின் ஆணையின்படி செயற்படனும் - ஐ.தே.க.

ட மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றமை பாராட்டத்தக்க விடயமாகும். இதன் மூலம் நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

எனவே கூட்டமைப்பின் இந்த சமிக்ஞையை புரிந்துகொண்டு மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்பட அரசாங்கம் முன்வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

குறிப்பாக விக்னேஸ்வரனின் வெற்றியையும் கூட்டமைப்பின் வெற்றியையும் அரசாங்கம் தடுக்க முயற்சித்தது. எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளது. 

இதனை நாங்கள் பாராட்டுகின்றோம். மேலும் வட மாகாணத்துக்கு எதனையும் வழங்க முடியாது என்று ஆளும் தரப்புக்குள்ளிருந்து கூறுபவர்களுக்கு சிறந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :