விக்கினேஸ்வரனுக்கு அடுத்த விருப்பு வாக்குகள் பெற்று சாதனைபடைத்த அனந்தி

ல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு பெண்ணாக துணிவுடன் வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு சாதித்திருக்கின்றார் அனந்தி சசிதரன்.

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு பிறகு 87,870 வாக்குகள் என்ற அதிகூடிய வாக்குகளைப் பெற்று சாதனையினை நிலைநாட்டி இருக்கின்றார்.

தமிழர் தேசத்தில் போரால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்து தவிக்கும் ஆயிரம் ஆயிரம் பெண்களில் நானும் ஒருத்தி. ஆகவே அப்படியான பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதே தனது பிரதான இலக்கு என்பதனை அடிக்கடி வலியுறுத்தியவர்.

அவரின் வீடு தாக்கப்பட்டதில் இருந்து அவரைப் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட வதந்திகளை பரப்பியும் , அச்சுறுத்தல் விடுத்தும் இராணுவமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் இறுதியில் முதலமைச்சர் வேட்பாளரைத் தவிர்த்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :