பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு பெண்ணாக துணிவுடன் வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு சாதித்திருக்கின்றார் அனந்தி சசிதரன்.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு பிறகு 87,870 வாக்குகள் என்ற அதிகூடிய வாக்குகளைப் பெற்று சாதனையினை நிலைநாட்டி இருக்கின்றார்.
தமிழர் தேசத்தில் போரால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்து தவிக்கும் ஆயிரம் ஆயிரம் பெண்களில் நானும் ஒருத்தி. ஆகவே அப்படியான பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதே தனது பிரதான இலக்கு என்பதனை அடிக்கடி வலியுறுத்தியவர்.
அவரின் வீடு தாக்கப்பட்டதில் இருந்து அவரைப் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட வதந்திகளை பரப்பியும் , அச்சுறுத்தல் விடுத்தும் இராணுவமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் இறுதியில் முதலமைச்சர் வேட்பாளரைத் தவிர்த்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு பிறகு 87,870 வாக்குகள் என்ற அதிகூடிய வாக்குகளைப் பெற்று சாதனையினை நிலைநாட்டி இருக்கின்றார்.
தமிழர் தேசத்தில் போரால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்து தவிக்கும் ஆயிரம் ஆயிரம் பெண்களில் நானும் ஒருத்தி. ஆகவே அப்படியான பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதே தனது பிரதான இலக்கு என்பதனை அடிக்கடி வலியுறுத்தியவர்.
அவரின் வீடு தாக்கப்பட்டதில் இருந்து அவரைப் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட வதந்திகளை பரப்பியும் , அச்சுறுத்தல் விடுத்தும் இராணுவமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் இறுதியில் முதலமைச்சர் வேட்பாளரைத் தவிர்த்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
0 comments :
Post a Comment