முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை இரத்து

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து ஆளும்தரப்புக்குத் தாவிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி எம்.பி. குறித்த உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல் உச்சபீடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆப்தீன் எஹியா, ஏ.எல்.எம். மில்ஹான், எஸ்.எச்.ஏ. கரீம், எம்.கே.எஸ் முனாஜித், எம்.எச்.எம். நஜாத் ஆகியோருக்கே செயலாளரினால் இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் வேட்பாளர் பட்டியல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தாங்கள் வேறாக கையொப்பமிட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது.

இத்தேர்தல்களில் தாங்கள் மனுத்தாக்கல் செய்துள்ள மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக எடுத்துள்ள முடிவை தாங்கள் உதாசினம் செய்துள்ளதுடன் கட்சியின் யாப்பையும் கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள்.

 எனவே கட்சியின் யாப்பின் அடிப்படையில் தனக்குள்ள அதிகாரத்தினைப் பாவித்து தலைவரவர்கள் உடனடியாக அமுலாகும் வண்ணம் தாங்களை அரசியல் உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியும், கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தியும் உள்ளார் என்பதனை அறியத் தருகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :