ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவுத்தை கட்சியிலிருந்தும் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியிலிருந்தும் நீக்குவது மற்றும் அவரது அமைச்சுப் பொறுப்பை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தைக் கோருதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கட்சியின் உயர் அரசியல் பீட அங்கத்தவர்கள் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலமாக அவரின் அரசசார்பு போக்கு மற்றும் வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க மறுத்தமை போன்ற பிரதான காரணங்களை முன்வைத்தே இவர் நீக்கப்படவுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
இது இவ்வாறிருக்க, அமைச்சர் பஷீர் ஷேகுதாவுத்தை கட்சியிலிருந்து உடனடியாக நீக்காவிட்டால் தாம் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறப் போவதாக உயர்மட்ட உறுப்பினர்கள் அமைச்சர் ஹக்கீமை வலியுறுத்தியதுடன் காலக்கெடு விதித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக அவரின் அரசசார்பு போக்கு மற்றும் வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க மறுத்தமை போன்ற பிரதான காரணங்களை முன்வைத்தே இவர் நீக்கப்படவுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
இது இவ்வாறிருக்க, அமைச்சர் பஷீர் ஷேகுதாவுத்தை கட்சியிலிருந்து உடனடியாக நீக்காவிட்டால் தாம் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறப் போவதாக உயர்மட்ட உறுப்பினர்கள் அமைச்சர் ஹக்கீமை வலியுறுத்தியதுடன் காலக்கெடு விதித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment