வெலி­வே­ரிய சம்­ப­வத்­துக்­கான பொறுப்பை ஜனா­தி­பதியே ஏற்கவேண்டும்-வாசு­தேவ நாண­யக்­கார

வெலி­வே­ரி­யவில் மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் இரா­ணுவம் யுத்­த­மொன்றில் செயற்­பட்­டது போன்று அப்­பாவி மக்­களை சுட்டு தாக்­கி­ய­மை­யா­னது மன்­னிக்­கக்­கூ­டிய குற்­ற­மல்ல.

எனவே, இதற்­கான பொறுப்­பினை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஏற்க வேண்­டு­மென ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணி­யின் ­செ­ய­லா­ளரும் சிரேஷ்ட அமைச்­ச­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச நெருக்­க­டிகள் மேலோங்கி இருக்கும் இந்­நி­லை­யிலும் பொது­ந­ல­வாய மாநாடு நடை­பெ­ற­வி­ருக்கும் இத்­த­ரு­ணத்தில் அர­சுக்­கெ­தி­ராக உள்­ளி­ருந்து கொண்டு யாரும் இவ்வாறு சூழ்ச்சி செய்­கி­றார்­களா என்ற சந்­தேகம் தோன்­று­கி­றது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வெலி­வே­ரிய சம்­பவம் தொடர்பில் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவர் அதில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இர­சா­யன, தொழிற்­சா­லையில் கழி­வுகள் வெளி­யி­டு­வதால் குடிநீர் மாச­டை­வ­தாக ரத்­து­பஸ்ெ­வல மக்கள் பல இடங்­க­ளுக்கு முறைப்­பாடு செய்தபோதும் குறித்த பிர­சி­னைக்கு எவ்­வித தீர்வும் காணாத நிலை­யி­லேயே இப்­போ­ராட்­டத்­துக்கு மக்கள் ஏற்­பாடு செய்து வீதிக்கு இறங்­கி­யுள்­ளனர்.

அத்­துடன், போராட்­டத்­துக்கு முன்பு மேற்­கொள்ள வேண்­டிய விஞ்­ஞான ரீதி­யான பரி­சீ­ல­னை­களை போராட்­டத்­துக்கு பின்பு செயற்­ப­டுத்­தி­யமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். அதே­போன்று தொழிற்­சா­லையை தற்­கா­லி­க­மாக மூட வேண்டும் என்று பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்த போதும் பொலிஸார் இவ்­வி­ட­யத்தில் அச­மந்தப்போக்­கி­லேயே செயற்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் பொலி­ஸார் மறற்றும் இராணுவத்தினரின் ஆயுத விளை­யாட்டால் அப்­பாவி வாலிபர்கள் மூவரின் உயிர்கள் பரி­தா­ப­க­ர­மாக பிரிந்­துள்­ளன. இவ்­வா­றான செயற்­பாட்­டினால் மக்­களின் வாக்­கு­களை பெற்று ஆட்சி பீடம் ஏறி இருக்கும் கூட்­ட­மைப்பு அர­சிற்கே அவப்­பெயர் ஏற்­படும்.

அத்­துடன் இவ்­வா­றான மிலேச்­சத்­த­ன­மான செயற்­பாட்டால் ஜனா­தி­ப­திக்கும் நாட்­டுக்கும் அவப்­பெயர் ஏற்­படும். எனவே இது குறித்து விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டு­மென ஜனநாயகத்தை போற்றும் நாங்கள் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்­துடன் இரா­ணு­வத்­தினர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் வேட்­டை­யா­டி­யுள்­ள­துடன் அவர்­க­ளு­டைய உப­க­ர­ணங்­க­ளுக்கும் சேதம் விளை­வித்­துள்­ள­தாக அமைச்சர் இவ்­வ­றிக்­கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :