அமெரிக்காவில் 3மாதங்களாக 2குழந்தைகளுடன் கடலிலேயே தத்தளித்துக்கொண்டிருந்த தம்பதியினர் மீட்பு.

மெரிக்காவில் மூன்று மாதங்களாக இரண்டு குழந்தைகளுடன் கடலிலேயே தத்தளித்து கொண்டிருந்த தம்பதியினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஷான் காஸ்டன்க்வேய் - ஹான்னா. இவர்களுக்கு அர்தித் என்ற 3 வயது மகளும், ரஹப் என்ற குழந்தையும் உள்ளது.

மத நம்பிக்கை மிகுந்த இந்த தம்பதியருக்கு ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி, கருக்கலைப்பை ஏற்றுக் கொள்வது போன்றவை பிடிக்கவில்லை.

எனவே இவர்கள் அமெரிக்காவிலிருந்து 3,300 மைல் தொலைவில் உள்ள சிறிய தீவு நாடான கிரிபாட்டிக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதன்படி, கடந்த மே மாதம் சான் டீகோவில் இருந்து சிறிய படகில் கிரிபாட்டிக்கு கிளம்பினர்.

அவர்கள் கிளம்பிய நேரத்தில் புயல் வேகமாக அடித்ததால், படகை மேலும் செலுத்த முடியாமல் கடலிலேயே தத்தளித்தனர்.

இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அந்த வழியாக சென்ற கப்பல் ஒன்று அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள சிலி நாட்டில் கடந்த 9ம் திகதி இறக்கிவிட்டது.

தற்போது அவர்கள் நாடு திரும்ப அமெரிக்க அரசு விமான டிக்கெட் எடுத்து அனுப்பியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :