வாஸ் குணவர்த்தனவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.


-நிருபர்-
ம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் 27ம் திகதி வரை வாஸ் குணவர்த்தனவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக இம்போட் மிரசெய்தியாளர் தெரிவித்தார்.

வாஸ் குணவர்த்தன அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 9 சந்தேகநபர்கள் இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீன் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை இன்று (14) பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 9வது சந்தேகநபர் எதிர்வரும் 21ம் திகதி காலி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்கில் ஆஜராக வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :