கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிக் கோரிக்கையாளர்கள் மீட்பு

வுஸ்திரேலியாவுக்கு சட்டத்துக்கு புறம்பான முறையில் கடல் மார்க்கமாக சென்ற ரொலர் படகு பழுதடைந்தமையால் சில நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 73அகதிக் கோரிக்கையாளர்களும் காப்பாற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

காலியிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த சட்டவிரோத அகதிக் கோரிக்கையாளர்கள் குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் விசாரணைகளுக்கான கையளிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. காப்பாற்றப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்களில் வடக்கு- கிழக்கைச் சேர்ந்தவர்களே அதிகமுள்ளனர்.

இலங்கையின் மிரிஸ்ஸ பிரதேசத்திலிருந்து அகதிக் கோரிக்கையாளர்களை ஏற்றிய ரொலர் படகொன்று அவுஸ்திரேலியா நோக்கி கடந்த 17ஆம் திகதி முன்னர் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நாட்களில் இலங்கையிலிருந்து 270 கடல் மைல் தொலைவில் குறித்த படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த23ஆம் திகதி படகிலிருந்தவர்களினால் இலங்கையின் கடற்படையினருக்கு ரேடர் கருவி மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடற்படையினர் இரண்டு நாட்களாக மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பின்னர் அகதிக் கோரிக்கையாளர்கள் 73 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :