அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து ஒருவர் மரணம்.


ட்டாளைச்சேனை - மீனோடைக்கட்டு பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

சம்மாந்துறை சவளக்கடையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீனோடைக்கட்டு சந்தியிலுள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் சென்ற சம்மாந்துறை சவளக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான மஹ்றூப் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய 29 வயதுடையவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :