வடமாகாணசபைத் தேர்தலில் 2000 தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக தேர்தல் கண்காணிப்பகமான பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பெவ்ரல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோகண ஹெட்டியாராய்ச்சி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இம்முறை வடமாகாண சபைத் தேர்தலில் சர்வதேச கண்காப்பாளர்களையும் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த வகையில் தாய்லாந்திலிருந்து 10 பேர் தேர்தல் கண்காணிப்புக்காக வரவழைக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, கால் நூற்றாண்டிற்குப் பின் வட மாகாணத்தில் தேர்தல்கள் நடைபெறுவதால் தமது நிறுவனத்தால் தேர்தல் தொடர்பான பல நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன்படி மக்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவை வழங்கும் கருத்தரங்குகள் கபே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment