மீண்டும் நில அதிர்வு இந்தோனேசியாவில் உணரப்பட்டுள்ளது.

ந்தோனேசியாவில் இன்று
6.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில அதிர்வினால் 35 பேர் கொல்லப்பட்டதுடன் , 4 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு சுமாத்திரா தீவுகளில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியிருந்தனர்.

இந்தோனேஷியாவின் பூகோள அமைவிடம் காரணமாக நிலநடுக்கும், எரிமலை குமுறல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி அங்கு ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :